கம்ப்யூட்டர் பாபா என பிரபலமாக அறியப்பட்ட மத தலைவரும், முன்னாள் அமைச்சர் இந்தூரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜம்புடி ஹாப்சி கிராமத்தில் கம்ப்யூட்டர் பாபா என பிரபலமான சாமியார் அரசு நிலத்தை சுமார் 40 ஏக்கர் வரை ஆக்கிரமித்து ஆசிரமம் காட்டியுள்ளார். இதனை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இடித்து அப்புறப்படுத்த முற்பட்டுள்ளனர். ஆனால், ஆசிரமம் இடிப்பதைத் தடுத்ததற்காக இந்தூரில் 'கம்ப்யூட்டர் பாபா' காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இடிக்கும் பணியைத் தடுக்க முயன்றதால் 6 பேர் கைது செய்தனர். இந்தூர் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம்தேவ் தியாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் காவல்துறையினர் கைது செய்தனர்.